இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இன்று (மே22) மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவானது மூன்றாவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மேன்முறையீட்டு மனுவானது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு
கிஹான் குலதுங்க மற்றும் திரு பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற சிவில்
மேன்முறையீட்டு அமர்வு முன்னிலையில் இந்த மனுவானது இன்று மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இங்கு பிரதிவாதி திரு.துமிந்த திஸாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி திரு.சந்தக ஜயசுந்தர நீதிமன்றத்தின் உண்மைகளை முன்வைத்தார்.
மேலும் கூடுதல் உண்மைகளை தாக்கல் செய்வதற்காக இம்மனுவின் மீதான விசாரணை எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க