உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

பதவி விலகமாட்டேன். பயங்கரவாதத்தை ஒழிப்பேன்- மீண்டும் ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விடயத்தில் பொறுப்புக்களில் இருந்து தவறியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை தடுக்காத அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை தாக்குதல் தொடர்பில் தாம் பதவி விலகப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை தாம் ஒழிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

அமரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின்போது எவரும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

பாரிய தொழில்நுட்பங்களை கொண்டிருந்தபோதும் இரட்டைக்கோபுர தாக்குதலை அமரிக்காவினால் தடுக்கமுடியாமல் போனது.

நாட்டில் இன்று இனங்களுக்கு இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சீர்செய்யவேண்டியது அவசியம் என்றும்; அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க