சினிமாபுதியவை

பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது பொலிஸார் புகார்!

சென்னை வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றமையால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை அந்த வழியாக தனது காரில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் சென்றுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,
இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை, வேல்முருகன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் காயமடைந்த வடிவேல், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதையடுத்து,
அதிகாரி வடிவேல், விருகம்பாக்கம் பொலிஸில் புகார் அளித்ததாகவும்
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க