புதியவைவிளையாட்டு செய்திகள்

முதல் முறையாக ஆட்டமிழந்த தோனி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இந்தப்போட்டியில் 18 ஆவது ஓவரில் தோனி களமிறங்கினார். இதில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். தோனி 14 ஓட்டங்களை குவித்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் இரண்டு ஓட்டங்களை எடுக்க முயற்சித்த போது ரன் அவுட் ஆனார்.

இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். தோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்

கருத்து தெரிவிக்க