இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் பதற்ற நிலை!

கண்டி மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இடம் பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த நபரொருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்,மருத்துவமனையில் பணிக்கிழாமினரும் புத்தாண்டு விழாவில் பங்கேற்றிருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க காலதாமதமாகியுள்ளது.

இதையடுத்து,மருத்துவமனை ஊழியர்களுக்கும் காயமடைந்த தரப்பினருக்கும் இடையே வார்த்தை பிரயோகம் இடம்பெற்று பின்னர் மோதலாக உருவெடுத்துள்ளதுடன் இருதரப்பையும் சேர்ந்த 07 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்,வைத்தியசாலை வளாகத்தி்ல் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் மெனிக்ஹின்ன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க