இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்!

இன்று (24.04) எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்நாட்களில் மழை பெய்யாவிட்டாலும், வறண்ட காலநிலை நிலவி வருவதால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அசுத்தமான நீர், ஓடையாக அந்த இடத்தில் ஓடுகிறது என்றார்.

அக்குடும்பங்கள் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க