இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நேற்று (18.04) இரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

எம்பிலிபிட்டிய – மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்த 71 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தி தொழில் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க