இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கல்கமுவ,மஹ களுகொல்லேவ ஆகிய பகுதிகளில் யானை தாக்கியதில் இருவர் பலி!

தனது மகளுடன் கல்கமுவ கல்லேவ பகுதியிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 62 வயதான ஒருவர், நேற்று(16.04) பிற்பகல் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன்
காயமடைந்த அவரது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்,மஹ களுகொல்லேவ பகுதியில் வயல் காணியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானைகளிடமிருந்து பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க