உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சுற்றுலாத்துறை அதிகார சபையின் எச்சரிக்கை கடிதம் குறித்து விசாரணை

சமூக வலைத்தளங்களில் பிரசாரப்படுத்தப்பட்ட, சுற்றுலாத்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் எச்சரிக்கை கடிதம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பி;த்துள்ளது.

உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத, காவல்துறை அலுவலர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடிப்படையாகக்கொண்டே இந்த கடிதம் சுற்றுலா அதிகாரசபையினால் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பெண் ஒருவர் குறித்த கடிதத்தை படம் பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்துள்ளார்.

இதனையடுத்து அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க