இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கொழும்பு – மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,
6 கோடி ரூபாய் பெறுமதி உடைய ஹெரோயின் கிராண்ட்பாஸ் பகுதிக்கு எடுத்துச்செல்லும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 7,50,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டியவை சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேகநபர், தற்போது துபாயில் தலைமறைவாகியுள்ள ‘கெசல்வத்த தினுக’ எனும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க