இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!!

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை, 36 வயதுடைய தந்தை ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி நேற்று (21.03) பாடசாலைக்கு சென்று தனது சக மாணவி ஊடாக தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், குறித்த சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க