சமீபத்திய செய்திகள்விளையாட்டு செய்திகள்

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள Siliwangi மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung) மற்றும் சுபாங் (FBI Subang) அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை (10.02) நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்து சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா ( Septain Raharja) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மயங்கி வீழ்ந்தார்.

இதன் போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கருத்து தெரிவிக்க