இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி

ஒரு மாதத்திற்குள் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு கொள்கைக்குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாகவும் ,அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக உயர்ந்திருந்த மரக்கறிகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க