இலங்கை

வட மாகாணத்தில் பரவும் எலிக்காய்ச்சல்

வடமாகாணத்தில் கடந்த வாரத்தில் மட்டு் மோசமான எலிக் காய்ச்சல் நோயால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினரால் வாராந்தம் வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் ஒருவரும் முல்லைத்தீவில் இருவரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் இந்த ஆண்டு இதுவரை 92 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எலியின் சிறுநீர் உணவுகளில் அல்லது நீர் தேங்கி நிற்கும் இடங்களில் கலப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க