பொன்மொழிகள்

உள்ளம்! ராமகிருஷ்ணர்

  • தன் மனத்தை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் ,உண்மை அன்பும் பரலோக ராஜ்யத்திற்குப் பாதைகளாகும்.
  • பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் நீ காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.
  • குழந்தையைப்போன்ற ஸாதுகுணம் ஒருவனுக்கு இல்லாத வரையில் திவ்யதரிசனம் உண்டாகாது. நீ கற்ற உலக ஞானத்தையெல்லாம் மறந்துவிட்டு, குழந்தையைப்போல களங்கமற்றவனாக இரு. அப்போது உனக்கு உண்மை ஞானம் உண்டாகும்.

கருத்து தெரிவிக்க