உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாவை சந்திக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடாகியுள்ளது.

இன்று இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த அமரவீர, தயாசிறி ஜெயசேகர, லசந்த அழகியவன்ன ஆகியோரே இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது புதிய தேர்தல் தொகுதிகள், விகிதாசார முறை தேர்தல் தேசியக்கொள்கைகள் உட்பட்ட பல விடயங்கள் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க