பொன்மொழிகள்

இறைவன்! கிருபானந்த வாரியார்

  • தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.
  • எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
  • தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைத் தலையாய கடமையாகக் கருதுபவனிடத்திலும், ஒருமைப்பட்ட மனத்துடன் தன் கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவியிடத்திலும், உண்மையே பேசி நாணயமாக நடக்கும் வியாபாரி இடத்திலும், புலனடக்கம் உள்ளவனிடத்திலும் இறைவன் இருக்கிறான்.

கருத்து தெரிவிக்க