உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடலில் விளையாடச்சென்ற பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

திருகோணமலை புல்மோட்டைப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்மலைக்குடா கடற்பிரதேசத்தில் நேற்று விளையாடச்சென்ற 12 வயது பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர் .

நேற்று மதியம் மூன்று பாடசாலை மாணவர்கள் பொன்மலைக்குடா கடற்கரை
பிரதேசத்திற்கு விளையாடச்சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் இறங்கிய மாணவர்களை அலை இழத்துச்செல்லும் போது அங்கு நின்ற மீனவர்களால் இருமாணவர்கள் நேற்று காப்பற்றப்பட்டபோதும் ஒருவர் காணாமல் போயிருந்த வேலையில் இன்று அதிகாலை கடலுக்குள் தேடுதலுக்கு சென்ற மீனவர்களால் கடலுக்குள் பாறையின் மீது மிதந்துக்கொன்றிருந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டதாக
மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புல்மேட்டை 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த 12 வயது
மாணவன் மக்கீன் முனாஸ் என புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்

கருத்து தெரிவிக்க