உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதுக்குடியிருப்பு வீதியில் விபத்து- ஒருவர் பலி!

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு-புதுக்குடியிருப்பு  வீதியில் நேற்று(25) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாப்புலவு ஊடாக வற்றாப்பளை செல்லும் பிரதான வீதியின் பிரம்படிப்பகுதியில் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு 7ஆம் வட்டாரம் கோம்பாவில், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 58 வயதுடைய பேரம்பலம் கருணாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க