உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

போர் வீரர்களை பாதுகாப்பேன்- கோட்டா

போரில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து படையினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின்கீழ் அதற்கு இடம்தரப்படமாட்டாது.

அத்துடன் நாட்டை துண்டாட இடம்தரப்படமாட்டாது என்றும் கோட்டாபய குறிப்பிட்டார்.

படையினரின் குடும்பங்களுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே கோட்டாபய இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

கருத்து தெரிவிக்க