உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில்  மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

வவுனியா நொச்சிமோட்டையிலுள்ள பாடசாலை மற்றும் அயற் கிராமங்கள், வர்த்தக நிலையங்களிற்கு முன்பாகவுள்ள இடங்களை துப்பரவு செய்யும் பணி இன்று (23.09) காலை 8.30மணி தொடக்கம் மதியம் 11.30மணி வரை இடம்பெற்றது.
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர  வித்தியாலயத்தின் அதிபர் கோ.குலேந்திரகுமார் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை மற்றும் அயற்கிராமங்களில் வித்தியாலய‌ மாணவர்கள், ஆசிரியர்கள், நகரசபையினர் இணைந்து மேற்கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியினை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையினால் நாட்டில் பல இடங்களில் டெங்கு நோய் தாக்கங்கள்  ஏற்படகூடிய சூழல் காணப்படுகின்ற  நிலையில் இவர்களின் நடவடிக்கை முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க