உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சாமிமலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குளவி கொட்டு 40 பேர் பாதிப்பு

மஸ்கெலிய  பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட   மஸ்கெலிய கவரவில தோட்ட  சோளங்கந்தை பிரிவை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள்   62 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் .

இன்று காலை 9 மணியளவில் 5 ம்   நம்பர்  மலையில்  கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது   குறித்த  பகுதியில் உள்ள  தேயிலை  செடிக்குல் இருந்த குளவிகள் கலைந்து வந்து  கொழுந்து பறித்து  கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மஸ்கெலிய  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு    மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு   தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும்  ஏனைய தொழிலாளர்கள்   சிகிச்சையின்   பின்  வீடு  திரும்பியதாகவும்   வைத்தியசாலை    தகவல்கள் தெரிவிக்கின்றன.           ( நிருபர்  ;சாமிமலை   ஞானராஜ் )  

கருத்து தெரிவிக்க