உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கபட்டது

பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிவமோகனின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வாரிக்குட்டியூரில் அமைக்கபட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றயதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கபட்டது.
வாரீக்குட்டியூர் மாதர்கிராம அபிவிருத்தி  சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளிற்கமைய குறித்த நிதி ஒதுக்கபட்டு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கபட்டிருந்தது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நாடாவெட்டி திறந்துவைத்தார்.
நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் சுஜீவன், தமிழரசுகட்சியினெ சேர்ந்த சி, ஜெகன், கிராமஅமைப்புகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க