உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு!!!

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட முகத்தான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று அவதானிக்கபட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள முகத்தான் குளத்திற்கு அருகாமையில் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக  யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவஇடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் சடலத்தினை அவதானித்ததுடன், யானை இறந்தமைக்கான காரணத்தை அறியும் முகமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க