உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதுக்குடியிருப்பு பகுதியில் ஆயுதம் தேடுதல் நடவடிக்கை மீண்டும் நாளை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அதனை அகழ்வு செய்வதற்காக இன்றைய தினம் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்களிடம் அனுமதி பெறப்பட்ட நிலையில் காலை 10 மணி முதல் தற்சமயம் வரை ஆயுதங்கள் தேடிய அகழ்வு பணி இடம் பெற்று வருகின்றது

பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர் இருப்பினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது

இன்று மாலை வரை குறித்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை காலை இடம்பெறவுள்ளது

கருத்து தெரிவிக்க