உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதிய கட்டளை தளபதியாக ஜயந்த செனவிரட்ன கடமைகளை பொறுப்பேற்றார்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேயர் ஜெனரல் துஸ்ஜந்த ராஜகுரு சேவைக்காலத்தை நிறைவு செய்து சென்ற நிலையில் குறித்த பதவிக்கான புதிய இராணுவ கட்டளை தளபதி நியமிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைக் கட்டளை  தலைமையகத்தில்  2019 -09 -16 காலை 10 மணி அளவில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைக் கட்டளை தலைமையக பதினோராவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரட்ன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

அதோடு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ராணுவ தளபதிக்கு முல்லைத்தீவு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஒன்றும் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க