உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

எழுக தமிழ் பேரணி – வவுனியாவில் கடையடைப்பு இடம்பெறவில்லை!

எழுக தமிழ் நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடைவடைப்பு போராட்டத்திற்கும் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கம் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என தெரிவித்த நிலையில் இன்று வழமைபோன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களும் வழங்மைபோன்று இடம்பெற்று வருகின்றது.

 

போக்குவரத்து சேவைகள் தங்கு தடையின்று இடம்பெறுகின்ற நிலையிலும் வவுனியாவில் இருந்து விசேட பேரூந்துகள் எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அழைத்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைந்தே காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க