மலையகச் செய்திகள்

சில ஆசிரியர்களினால் கேள்வி குறியாகும் மலையக மாணவர்களின் எதிர்காலம்?

க/ பரணகள தமிழ் வித்தியாலயம், தொளஸ்பாகை, நாவலபிட்டிய. பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களினால் பல அசம்பாவிதம் இடம்பெறுவதாக எமது ஊடகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதாவது, குறித்த பாடசாலையில் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் பாட வேளைகளில் கல்வி பயிற்றுவிக்காமல் ஆசிரியர்களின் சுய தேவைகளுக்காக கடைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதனை கண்டித்து பல தடவை ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் முறையிட்ட போதும், பாடசாலை நிர்வாகத்தினால் எவ்வித நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட கல்வி காரியாலயத்தில் முறையீடு முன்வைத்த போதும் இது தொடர்பில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் பாடசாலை வேளையில் வெளியில் அனுப்பப்பட்ட மாணவர்களே தமது முறைப்பாட்டை முன்வந்து தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரினால் இவ் விடயம் தொடர்பில் பலமுறை குறித்த ஆசிரியர்களிடம் போராடி தீர்வு கிடைக்காத நிலையில் எமக்கு இந்த செய்தியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க