உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘எழுக தமிழ் எழுச்சிப் பேரணி’- யாழ் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுப்பு !

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மற்றொரு பகுதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய முன்றலிலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்தும் மாணவர்களின் ஏற்பாட்டி இந்த பேரணி இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்துக்குள் பேரணியை ஆரம்பிக்க பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதியளிக்க மறுத்தனர்.

எனினும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறுப்புவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் வளாகத்துக்குள் பேரணி ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டது.

நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ்ப்பாணம் நகரில் ஒன்றிணைந்து முற்றவெளித் திடலை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க