உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹங்வெல்ல துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு!

ஹங்வெல்ல- எம்புல்கம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும்  உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23 வயதுடைய ஒருவர் நேற்று இரவே உயிரிழந்தார்.

இதேவேளை, காயமடைந்த மற்ற நபர் ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க