உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கையின் அரசியலில் நடக்கப்போகும் இரண்டு சம்பவங்கள்

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோர் இடைநிறுத்தப்படுவதும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி சேராது என்பனவுமே இந்த வாரத்தில் வரப்போகும் புதுச்செய்திகளாக இருக்கின்றன.

கட்சியின் தலைமைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற காரணத்துக்காக கபீர் ஹாசிம், அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை இடைநிறுத்துவது என்று தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதில் ஹாசிம் தலைவருக்கு எதிராக சதிசெய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
எனவே அவருக்கான தண்டனை அதிகமாக இருக்கும்.

ஏனைய இரண்டு அமைச்சர்களும் ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சின்னத்தின்கீழ் போட்டியிட்டால் மாத்திரமே தாம் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கலாம் என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிபந்தனையை ஏற்க மஹிந்த தரப்பு தயாராக இல்லை எனவே அந்த இரண்டு கட்சிகளும் பேச்சு நடத்திவரும் கூட்டணிக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க