உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தெமடகொட பகுதியில் வெடிப்புச் சம்பவம் – இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெமடகொட, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 8.45 மணி அளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்ததலாலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க