உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம்

வடமாகாண தொழிற்திணைக்களம் ,தேசிய அருங்கலைகள் பேரவை ,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியன மத்திய வங்கியுடன் இணைந்து நடாத்தும் மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று (14) மாலை விஜயம் செய்தார் .

கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் வடமாகாண உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பமான இந்த கைத்தொழில் கண்காட்சி இன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க