உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்; பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கை!

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் நேற்றயதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை குறித்த தகவல் கிடைக்கபெற்றநிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் வருகைதந்த வவுனியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டம் ஒன்று இன்றயதினம் ஆளுனரது பங்கேற்புடன் திறந்து வைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க