உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு – photos

இன மத ரீதியான வேறுபாடுகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விழுமிய பண்புகள் ஊடாக செயற்படுத்தி நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிய ஒன்றியத்தினுடைய ஏற்பாட்டில் சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புடன் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் செயலமர்வு இன்று புதன் கிழமை (11) காலை  மன்னார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த செயலமர்வில் அனைத்து மதங்கள் மற்றும் இனங்கள் மத்தியில் காணப்படும் பொதுவான விழுமியப் பண்புகள் ஊடாக சமூகத்தில் முரண்பாடுகள் பாரபட்சம் வன்முறைகள் ஏற்படுவதை குறைப்பது தொடர்பாகவும் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில் இளைஞர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவுரைகள் மூலமும் நடை முறை பயிற்சிகள் மூலமும் தெளிவு படுத்தப்பட்டது.
ஆசிய ஒன்றியத்தினுடைய பயிற்சி வழங்குனர்களான றம்சி மற்றும் தெவுனி விரிவுரைகளை வழங்கியதுடன் குறித்த பயிற்சிகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் தொடர்சியாக மாவட்ட ரீதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பத்து மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் ஊடாக ஏனைய இளைஞர்களுக்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க