வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல். பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் காஸா பள்ளத்தாக்கு பகுதியை நோக்கி சுமார் 600 ரொக்கட் குண்டுகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 320 குண்டுகள் இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.

கருத்து தெரிவிக்க