வெளிநாட்டு செய்திகள்

ரஸ்ய வானூர்தி விபத்து. 41பேர் பலி

அவசரமாக தரையிறங்கிய ரஸ்ய வானூர்தி ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் 41 பயணிகள் பலியாகினர்.

மொஸ்கோ, சேரிமேட்யேவோ வானூர்தி தளத்தில் இந்த விபத்து இன்று இடம்பெற்றது.

இதன்போது அவசரக்கதவை திறந்து சில பயணிகள் வெளியில் பாய்ந்துள்ளனர்.

எனினும் இரண்டு குழந்தைகள் உட்பட்ட 41 பேர் பலியாகினர்

சம்பவத்தின்போது வானூர்தியில் 71 பயணிகள் இருந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க