உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சஜித், ரணில் சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இன்று (08) நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்குவதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்துவருவதாலேயே இன்றைய சந்திப்பை சஜித் நிராகரித்தார் என தகவல்கள் வெளியானாலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த சந்திப்பு நடைபெறும் என ஐ.தே.கவின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தன.

 

 

கருத்து தெரிவிக்க