உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இராணுவ வீரரொருவர் தூக்கிட்டு தற்கொலை

பிலியந்தலை, படுவன்தர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இராணுவ வீரரொருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த வீரரின் சடலம் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவர் அனுராதபுரம்- எலகஹபத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

தனது உயர் அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ள இவர், அந்த அதிகாரியின் வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க