உள்நாட்டு செய்திகள்

மதூஷ் தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுகிறார்

போதைவஸ்து கடத்தல்காரரான மாக்கந்துரே மதூஷ், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் துபாயில் கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதனையடுத்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட அவர், குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்.

இதேவேளை மதூஷ் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர், இலங்கையின் காவல்துறை அதிகாரிகள் சிலரும் துபாய் சென்று மதூஷ் நாடுகடத்தப்பட்டபோது மதூஷை அழைத்து வந்த துபாய் அதிகாரிகளுடன், இலங்கைக்கு பயணித்துள்ளனர்.

பின்னர் கட்டுநாயக்கவில் வைத்தே அவரை, காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

கருத்து தெரிவிக்க