உள்நாட்டு செய்திகள்

பயண ஆவணங்களை சமர்ப்பிக்காத இலங்கையர் கைது

30வயதான இலங்கையர் ஒருவர் கேரளாவில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உரிய பயண ஆவணங்களை சமர்ப்பிக்காமையை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டார்

மலுகே ஜூத் செல்பொன் டயஸ் என்று தம்மை அடையாளப்படுத்திய அவர், தம்பனூர் பேருந்து நிலையத்தில் நின்றபோதே கைதுசெய்யப்பட்டார்.

இதன்பின்னர் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் இருந்து மொழிப்பெயர்ப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதனையடுத்து, அவர், தமிழகம், நாகர்கோயில் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமது கடவுச்சீட்டு உட்பட்ட ஆவணங்கள். கைப்பையில் இருந்து திருடுபோய் விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கேரளாவுக்கு எவ்வாறு வந்தார் என்ற விடயத்தை அவர் இன்னும் கூறவில்லை.

கருத்து தெரிவிக்க