உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மஹேந்திரனை நாடு கடத்தக்கோரும் பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பம்

மத்திய வங்கியின் முறிவிற்பனை முறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தவேண்டும் என்று கோரும் பத்திரத்தில் இலங்கை ஜனாதிபதி இன்று கையொப்பமிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, மஹேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 21ஆயிரம் பக்கங்களைக் கொண்ட சட்டமா அதிபரால் தயாரிக்கப்பட்ட பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த பத்திரம் வெளியுறவு அமைச்சின் ஊடாக சிங்கப்பூரின் அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் முறிகளை ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் அதிக விலைக்கு விற்பனை செய்ய கட்டளையிட்டதாக மஹேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க