உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரணிலின் கருத்தால் குழப்பம்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் தானே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக கூறப்படுவதும்,தாம் போட்டியிட தயார் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளமையும் கட்சி தரப்பில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.

சஜித் பிரேமதாஸ, தாமே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவேண்டும் என்று தெரிவித்து வருகிறார்.

அவருக்கு ரணிலின் நெருங்கிய நண்பர்களான மலிக் சமரவிக்கிரமவும் மங்கள சமரவீரவும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் ரணில் மற்றும் கரு ஜெயசூரிய ஆகியோரின் கருத்து குழப்பநிலையை தோற்றுவித்துள்ளது.

எனினும் தாமே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதாக ரணில் கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு எவையும் இதுவரை வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க