உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவுக்குள் மோதல் உக்கிரம்- ரணில், சஜித் மீண்டும் பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை மறுதினம் ( 08) ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது புதிய அரசியல் கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அவ்வேளையில்  ஜனாதிபதி வேட்பாளராக  சஜித்தை பெயரிடுமாறு கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த செயற்குழு கூட்டத்தில் இது பற்றி ஆராய்ந்து  முடிவெடுக்கலாம் என பிரதமர் கூறியுள்ளார்.

 

 

 

கருத்து தெரிவிக்க