ஜோதிடம்

இராகு கேதுவினால் ஏற்படும் தாக்கங்கள். அவற்றுக்கான பரிகாரக் கோயில்கள்

தமிழகத்தில் இருந்து குணா

வட்டங்களால் ஆனது நமது வாழ்க்கை, வட்டவடிவமான உலகில் பிறக்கும் நம்மை, வட்டங்கள் விட்டுவைப்பதில்லை.

விழிப்பு உறக்கம் என்;று வாழும் காலசக்கரத்தையும் இரு வட்டங்களே தீர்மானிக்கின்றன.

பகலும்… இரவும்… இந்த சூரிய சந்திர வட்டங்களில் சூரியனை பிதுர்காரகன்( தந்தைக்காரகன்) என்றும் சந்திரனை மாதுர்காரகன்( தாய்காரகன் என்றும் ஜோதிடம் சிறப்பிக்கிறது.

நமது கர்மா படி நமது வாழ்க்கை ஓட்டத்தை ஆளுமை செய்யும் கிரகங்கள் அனைத்தும் வட்டவடிவம் தானே.

இதில் ஒன்றுக்கூட சதுரவடிவமாகவோ, செவ்வகமாகவோ, முக்கோணமாகவோ இல்லாமல் இருப்பது ஆய்வுக்குரிய ஆச்சரியமே.

ஆக அந்த வட்டவடிவமே தமது வாழ்வில் சூட்சு சக்தி என்கிறது ஜோதிடம்.

ஒருவரின் ஜாதகத்தை குறிக்கும்போது நீள் சதுரவடிவில் கட்டம் வரைந்துதானே குறிக்கிறார்கள் என்று தோன்றலாம்.

ஆனால் அது உண்மையில் ஒரு வட்டமே.

ஒரு வட்டத்தின் முழு அளவு 360 பாகை டிகிரி. அதே அளவை பயன்படுத்தியே ஒன்பது கிரகங்களின் டிகிரியை குறிக்கிறார்கள்.

மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு கட்டம். ஆராய்ந்துப் பார்த்தால் அது ஒரு வட்டம்.

வட்டம் வரைந்து சாதகம் குறிக்க கஸ்டமாக இருந்தப்படியால் கட்டத்தி;ல் ஜாதகத்தை வரைந்து எளிமையாக்கினர்கள்.

சூரியக் குடும்பத்தில் காலச்சக்கரத்தை சுற்றும் பொறுப்பு சூரியனுக்கும் சந்திரனுக்குமே உள்ளது.

அதேபோல மனித உருவத்தையும் இவர்களே பாதிக்கிறார்கள் என்பதற்கு நேரிடை சாட்சியாக விளங்குவது சிவபெருமானின் அர்த்தநாரீசுவரக் கோலம்.

ஆண், பெண் இல்லையேல் இந்த உலகம் இல்லை. சூரியன் சந்திரன் இல்லையேல் காலமே இல்லை.

இதுவெல்லாம் சரிதான், இந்த இருவட்டத்துக்கும் ராகு கேதுவுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம்?

ஆனால் நிறையவே சம்பந்தம் உண்டு. இந்த மனித வாழ்க்கையை காலத்துடன் சம்பந்தப்படுத்தியே எல்லா நியதிகளையும் வகுத்துள்ளோம்

இந்த வயதில் படித்துவிடவேண்டும். இந்த வயதில் திருமணம் குழந்தை சம்பாத்தியம் சேமிப்பு வீடு என்று எல்லாவற்றையும் வயதுடன் இணைத்தே காலநிர்ணயம் செய்கிறோம்.

காலம் கடந்த வெற்றி சமூகத்தினால்

நமது காலம் விழுங்கப்படுவது அல்லது வீணடிக்கப்படுவது இராகு கேதுக்களால்தான் என்கிறது ஜோதிடம்.

சூரிய சந்திர வட்டங்களால் வழங்கப்படும் காலத்தை இந்த சர்ப்பங்கள் விழுங்குவதன் காரணமாக, “காலசர்ப்ப தோஷம்” என்ற விதியே உருவானது.

இதற்கு புறச்சாட்சியாக விளங்கும் அறிவியல் நிகழ்வே சூரிய சந்திர கிரகணங்களாகும்.

இராகு சூரியனை பீடித்தால் அது சூரியக்கிரகணம், கேது சந்திரனை பீடித்தால் அது சந்திரக்கிரகணம்.

இதனையே முன்னோர் சூரியனை பாம்பு விழுங்குகிறது என்ற வேடிக்கையாக சொல்லி வைத்தனர்.

எனவே மனிதனின் வலப்பக்கம் இயங்கும் சூரிய நாடியும் இடப்பக்கம் இயங்கும் சந்திர நாடியும் சிறப்புடன் செயற்பட்டால் மனித வாழ்வு சிறப்புறும்.

அதற்கு மாறாக,சூரிய சந்திர நாடிகள், இராகு கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டால், நம்வாழ்வு குடத்திலிட்ட விளக்குப் போல, பயனின்றி போய்விடும் என்கிறது ஜோதிடம்.

இந்த இரண்டு கிரகங்களும் லக்கினத்துக்கு 1, 2, 5 7 மற்றும் 8 இடங்களில் இருந்தால், சர்ப்ப தோஷம் ஏற்படும்.

இவர்கள் இருவருக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் நின்றால், “காலசர்ப்ப தோஷம்” ஏற்படுகிறது.

இந்த தோஷம் உள்ளவர்கள் வாழ்வில் நடுப்பகுதி வரை வெற்றிக்காண முடியாமல் தடுமாறுவர்.

எல்லாம் இருந்தும் வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கும்.

சிலருக்கு காலதாமத திருமணத்தை இது ஏற்படுத்தும்.

பொதுவில் களத்திர ஸ்தானத்தி;ல் இராகு நின்றால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் இடம்பெறும்.

கேது நின்றால் திருமண வாய்ப்பே இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

5இல் இராகு இருந்தால், கருக்கலைதல், கேது இருந்தால் குழந்தையின்மை, 2.8 இடங்களில் இராகு- கேது இருந்தால், குடும்ப வாழ்வில் பிரச்சினைகள், வீண் வம்பு வழக்குகள் மற்றும் ஆயுள் குறைப்பாடு போன்றவை உருவாகும்.

பொதுவாக இராகு- கேது நல்ல பாவங்களில் அவருடைய பார்வை பெறாமல் இருந்தால், அந்த பாவத்தை கெடுத்து, கெடு பலன்களை கொடுத்து விடுவார்கள்.

ஆனால் 3, 6, 11 ஆம் இடங்களில் அவரின் பார்வை பெற்று பலமுடன் அமர்ந்தால், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றியை அள்ளித்தருவார்கள்.

3இல் நின்றால், புகழ், செல்வாக்கு மற்றும் ஆதாயம், 6இல் இருந்தால், பெரிய அளவில் கடன்  பெறும் யோகம், கொடுக்கல் வாங்கல்களில் யோகம், எதிரிகளை வெற்றிக்கொள்ளுதல் மற்றும் சூதாட்டத்தில் அதிஷ்டம்.

பதினொன்றில் நின்றால்,  இலாபம் வரைமுறையின்றி ஏற்படுதல், செல்வாக்குள்ள மனிதர்களை நண்;பர்களாக பெறுதல், போன்ற பலன்கள் கிடைக்கும்

சரி இவர்களால் கிடைக்கும் யோகங்கள் நல்லதே. ஆனால் தோஷங்களை எவ்வாறு போக்குவது?

பிரச்சினை ஒன்று இருக்குமானால் தீர்வு ஒன்று இருந்தேயாகவேண்டும்.

இந்த சர்ப்ப தோஷங்களுக்கு தமிழகத்திலும் இலங்கையிலும் பரிகாரக்கோயில்கள் நிறையவே இருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பாம்புரம் பிரபலமான பரிகார ஸ்தலமாகும்.

இலங்கையில் வடக்கில் நாகர்கோவில் நாகதம்பிரான் கோயில்
முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.

 

 

 

 

 

 

 

கருத்து தெரிவிக்க