உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

வியாழேந்திரன் உட்பட ஐவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட ஐவரை மீண்டும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 4ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களயப்பு நகரில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் ரி.எம்.வி.பி.மட்டக்களப்’பு மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் உட்பட ஐவரும் ஆஜரான போது மீண்டும் அக்டோபர் மாதம் 4ம் திகதி ஆஜராகுமாறும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்குமாறும் நீதிபதி உத்தரிவிட்டுள்ளர்.

கடந்த செவ்வாய்க்கிழமை; ஏப்ரல் 21 சீயோன் தேவாலய தாக்குதிலில் பலியான தற்கொலைக் குண்டுதாரியின் உடலை நீதிமன்ற உத்தரவின்பேரில் மட்டக்களப்பு கள்ளியன்காடு மயானத்தில் புதைத்தமையைமைக் கணடித்தே பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான குழுவினர் பாரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க