உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டிடம் ஜனாதிபதியினால் திறப்பு

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டடம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன் எம் ஏ சுமந்திரன் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் அரசு அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டிருந்தார்கியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதுடன் தமது விவரங்களை பதிவு செய்து நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.

கருத்து தெரிவிக்க