உள்நாட்டு செய்திகள்

மாக்கந்துரே மதூஸ் நாடு கடத்தப்பட்டு, விசாரணை செய்யப்படுகிறார்

துபாயில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாக்கந்துரே மதூஸ் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் குற்றப்புலனாய்வு துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

40வயதான சமரசிங்க ஆராச்சிகே மதுஸ் லக்சித்த என்ற மாக்கந்துரே மதூஸ், தற்போது குற்றப்புலனாய்வுத்துறையினரின் தலைமையகத்தில் விசாரணை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவரின் கடவுச்சீட்டில் அஜித ஆராச்சிகே வர்ணகுலசூரிய என்ற பெயரே பதியப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க