உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை குண்டுதாரிகள் காஸ்மீருக்கு வரவில்லை-இந்திய இராணுவத் தளபதி

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் இந்திய காஸ்மீருக்கு வந்து சென்றமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று இந்;தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இராணுவத் தளபதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்
தமது நாட்டின் குடிவரவு தரவுகளுக்கு அமைய இந்த தாக்குதல்தாரிகள் எவரும் காஸ்மீருக்கு வந்து செல்லவில்லை.
எனினும் அவர்கள் வேறு பெயர்களில் வந்து சென்றனரா? என்பது குறித்து தேடப்படுவதாகவும இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்;

ஏற்கனவே இலங்கையின் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, குண்டுத்தாரிகள், இந்தியாவின் காஸ்மீர் மற்றும் கேரளாவுக்கு சென்று வந்ததாக வெளியிட்ட தகவலுக்கே இந்திய இராணுவத்தளபதியின் பதில் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க