வெளிநாட்டு செய்திகள்

தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல்

காஸா பள்ளத்தாக்கில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இன்று மாத்திரம் சுமார் 200 ஏவுகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களில் ஒரு இஸ்ரேலிய பொதுமகன் கொல்லப்பட்டார்.

மறுபுறத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப்புறத்தில் நடத்திய வானூர்தி தாக்குதலில் நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரலில் இஸ்ரேலில் இடம்பெற்ற தேர்தல் காரணமாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தாக்குதல்கள் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க